நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீராண வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.