உங்க வீட்டில் இப்படி சுவாமி படங்களை வைத்து இருந்தால் சண்டை, சச்சரவுகள் வர வாய்ப்புகள் உண்டு.

0

ஒரு குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும் இருக்க தம்பதியருக்குள் ஒற்றுமை அவசியம் தேவை.

தம்பதிகள் ஒற்றுமை இல்லை என்றால் அந்த குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிச்சயம் இருக்காது. இதனால் சம்பந்தப்பட்ட அவர்கள் மட்டும் அல்லாமல் குழந்தைகளும், பெரியவர்களும் அந்த குடும்பத்தில் பெருமளவு பாதிக்கப் படுகிறார்கள்.

தம்பதியர் ஒற்றுமை நிலவ நாம் பூஜை அறையில் எந்த மாதிரியான சுவாமி படங்களை வைக்கலாம்? வைக்கக் கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம். தம்பதியர் ஒற்றுமை நிலவ நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜை அறை சுத்தம் இல்லாத வீட்டில் தம்பதியர் ஒற்றுமை நிச்சயம் இருக்காது என்கிறது சாஸ்திரம்.

எனவே வாரம் ஒரு முறை ஆவது பூஜை அறையை ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – அதே போல தம்பதியர் ஒற்றுமைக்கு பூஜை அறையில் இருக்கும் படங்கள் மிக நெருக்க நெருக்கமாக இருக்கக் கூடாது.

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடைவெளி விட்டு வைக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்தினுடைய கண்ணாடி எக்காரணம் கொண்டும் உடைந்து இருக்கக் கூடாது.

அப்படி உடைந்த கண்ணாடியுடன் படங்களை வைத்து இருந்தால் அங்கு தம்பதியர் ஒற்றுமை குறைவு ஏற்படும்.

பூஜை அறையில் சுவாமி படங்கள் நிறைய வைக்க விரும்புபவர்கள் அதனை பராமரிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒன்றிரண்டு படங்களை வைத்து இருந்தாலும் நீங்கள் சரியாக பராமரித்து வந்தால் தான் அங்கு தெய்வ கடாட்சம் கிடைக்கும். தெய்வ கடாட்சம் இருந்தால் தான் குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும்.

சுவாமி படங்களில் இருக்கும் தெய்வங்களில் சில தனியாக இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம்.

உதாரணத்திற்கு சிவனும், பார்வதியும் தனித்தனியாக இருக்குமாறு படங்களை வைத்திருக்கக் கூடாது. – Advertisement – இது போல தனி தனியாக சுவாமி படங்களை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் கட்டாயம் அங்கு தம்பதியர் ஒற்றுமையை குறைவாக இருக்கும்.

அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் எனவே சிவபார்வதி இணைந்து இருக்கும் படத்தையும் அல்லது அர்த்தநாரீஸ்வரர் படத்தையும் வைத்துக் கொண்டால் தம்பதி ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.

என்னுள் பாதி நீ என்று உரைத்த ஈசனை பிரதிபலிக்கும் அர்தநாரீஸ்வரர் படத்தை வைத்து பூஜித்து வந்தால் தம்பதியருக்குள் இருக்கும் பிரிவுகள் நீங்கி மீண்டும் ஒன்றிணைந்து விடுவார்கள் பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவி மீண்டும் உங்களை வந்து இணைவார்கள்.

அத்தகைய அதிசக்தி வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டை சோமவாரத்தில் செய்து வாருங்கள்.

ஈசனைப் போலவே நாராயணரும் தன் துணைவியாருடன் இருப்பது தான் மிகவும் நன்று. பத்மாவதி தாயார் உடன் இருக்கும் பெருமாள் படத்தை வைத்திருந்தால் குடும்பத்தில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் வராது. அப்படியே வந்தாலும் சனிக்கிழமைகளில் ஒரு நெய் தீபம் ஏற்றி பாருங்கள், வந்த சண்டைகள் நொடியில் தீரும்.

தனியாக இருக்கும் பெருமாள் படத்தை வைப்பது அவ்வளவு நல்லதல்ல எனவே பத்மாவதி தாயார் உடன் இணைந்த பெருமாள் படத்தை வைத்து வழிபடுங்கள்.

தனியாக இருக்கும் பெருமாள் படமும், பத்மாவதி தாயார் உடன் இணைந்து இருக்கும் படமும் நீங்கள் வைத்திருந்தால் அதில் பிரச்சனை இல்லை ஆனால் பத்மாவதி தாயார் இல்லாமல் தனியாக வைத்திருக்கும் பெருமாள் படத்தை வீட்டில் வைக்காதீர்கள்.

Leave a Reply