இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் புதிய சுகாதார வழிகாட்டல்கள்.

0

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய திருமண மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிப்புற வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எணிக்கையில் 75 சதவீத பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதுடன் அலுவலகம் மற்றும் தொழில் முறை சந்திப்புக்களில் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply