எரிவாயு சம்பந்தமான சிக்கல் நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட எண் அறிமுகம்.

0

சமையல் எரிவாயு கொள்கலனின் வெடிப்பு தொடர்பில் வெளியாகும் தகவல் குறித்து ஆய்வினை மேற்கொள்வதற்கான அமைச்சின் ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளது..

இதற்கமைய குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் முன்வைத்த யோசனைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அனுமதி வழங்கியதையடுத்து இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

மேலும் எரிவாயு சம்பந்தமான சிக்கல் நிலைமை காணப்படின் 1311 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தமாறு விட்ரோ நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply