வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து- 8 வயது சிறுமி பலி.

0

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த தீ விபத்து சம்பவம் மாத்தறை-வெலிகம , வள்ளிவல கிழக்கு பகுதியில் இடம்பெற்றது.

அத்துடன் இந்த தீ விபத்தின் போது குறித்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மின்கசிவு காரணமாக குறித்த தீ விபத்து சம்பவம் பதிவாகி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply