உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

0

தாம் முதற்கட்ட நடவடிக்கையே ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் இரண்டு வழிமுறைகள் தங்களது சங்கத்தால் அமுல்படுத்த படவுள்ளதாக ” சட்டப்படி வேலை செய்யும் ” தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

இதற்கமைய அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்று வழங்கும் உடன்படிக்கைக்கு எதிராக மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த தொழிற்சங்க போராட்டம் நேற்று நண்பகல் முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் இந்த தொழிற்சங்க போராட்டம் முனெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரடுவ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கள் ஆரம்பித்துள்ள 48 மணி நேர அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply