யாழில் இடம்பெற்ற பெரும் சோகம்- அதிர்ச்சியில் மக்கள்!

0

யாழ்ப்பாணம் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தில் வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை மாணவியான பிரேமசந்திரன் திசாரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த மாணவி இன்றைய தினம் செய்முறை பரீட்சை தொடர்பாக பாடசாலைக்கு வருமாறு ஆசிரியரினால் அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கான தயார்படுத்தல்களை செய்துவிட்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தொலைக்காட்சி பார்த்து விட்டே மாணவி இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply