உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விடயத்தை உயர் தொழில்நுட்பத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்யாணி பொன் நுழைவாயிலை திறந்து வைத்து உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நிறைவேற்ற முடியும்.

மேலும் அதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது.

ஆகவே கோரிக்கைகளை முன்வைக்கும் போது கவனமாக இருப்பதுடன் மக்களை ஏமாற்ற வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply