திருகோணமலை குறிஞ்சாக் கேணி பகுதியில் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ள படகு சேவை.

0

திருகோணமலை மாவட்டத்தின் குறிஞ்சாக் கேணி பகுதியில் இன்று முதல் படகு சேவையினை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இதற்கமைய ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்க கூடிய வகையில் இந்தப் படகு சேவை அமைந்துள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை – குறிஞ்சாக்கேணி நீ மிதப்பு பாலம் கவிழ்ந்து அனர்த்தத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த பாலத்தின் உரிமையாளர் உட்பட மூன்று பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப் பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply