அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று.

0

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபையில் இருக்குமாறு அரசாங்கமும் எதிர்க்கட்சியினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 13ஆம் திகதி தொடங்கிய குறித்த விவாதத்தின் 7 வது நாள் இன்றாகும்.

அத்துடன் பாதீடு மீதான குழுநிலை விவாதம் நாளை ஆரம்பமாகி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

மேலும் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply