பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அரசாங்க அதிபர் பங்கேற்ற திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர கோவிலில் விசேட பூஜை.

0

மாண்புமிகு பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலில் நேற்றைய தினம் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

இதற்கமைய நாட்டுக்கும், மக்களுக்கும், மாண்புமிகு பிரதம மந்திரி உட்பட அனைவருக்கும் ஆசி வேண்டி நடைபெற்ற இப்பூஜை வழிபாடுகளில் மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply