தற்போது அரச நிறுவனங்கள், வங்கிகள், தொலைபேசி சேவை வழங்குனர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் பிரதியாக தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வகுக்கவும் பிரதியாக தரவுப் பாதுகாப்பு சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



