எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை.

0

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்கள் ஏனும் மூட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக வெளிச்சத்தை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நேற்றைய தினம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்பட்ட போதிலும் எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply