திறக்கப்படாத வகுப்புகளை மீளத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை காலமும் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாடாளுமன்ற இடம்பெற்று வரும் 2022-ம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே குறித்த விடையத்தை அறிவித்துள்ளார்.

மேலும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மற்றும் 10 முதல் 13 வரையான தரங் களுக்கான கற்றல் செயல்பாடுகள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply