தற்போது நாட்டில் டெங்கு நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் டெங்கு நோய் தற்போது தொற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இலங்கையில் கடந்த வருடம் 31,162 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
இதற்கமைய வீட்டுச்சூழல் உட்பட நுளம்புகள் பெருகும் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் இவ்வருடம் தற்போது வரையில் 15,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.