தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் நாடு சூழவுள்ள கடற்பரப்பில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் குறித்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.