மற்றுமொரு புதிய தாழமுக்க பிரதேசம்.

0

தென் அந்தமான் தீவுக்கு அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கு நாளைய தினமாகும் போது புதிதாக ஒரு தாழமுக்க பிரதேசம் உருவாகக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழ்கடல் பகுதிகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பரப்புகளில் கடல் அலைகள் 2.5-3 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படும் என்பதுடன் பலமான காற்று வீசுவதுடன்அக் கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply