சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து கன மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை கரையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் தற்போது சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட தகுதிகள் பலத்த காற்று வீசி வருகின்றது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.