கடும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் சற்று குறைவடையும்.

0

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல் , சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அவ்வாறு ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply