ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்.

0

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ சுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராசா ஆகியோரே ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த செயலணியின் அங்கத்துவ அமைப்பு மற்றும் விடய நிர்ணயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பிரதிநிதித்துவங்களை கருத்திற்கொண்டு இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply