காணாமல் போன சிறுமிகள் மூவரும் மீண்டும் வீடு திரும்பினார்.

0

கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் காணாமல் ஆக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சிறுமிகள் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய தமது அயல் வீடு ஒன்றில் இருந்த போதே இந்த சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு காணாமல் போன மூன்று சிறுமிகளில் இருவரின் தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்ட காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமியர் மூவரும் கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு நேற்று முன்தினம் எட்டாம் தேதி சென்றுள்ளதாகவும் மீள அவர்கள் கொழும்புக்கு திரும்பி வந்து வீட்டிற்கு அருகே உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது காவல்துறையினரால் மீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply