இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி காணப்படும்.

அவ்வாறு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply