அடுத்த 24 மணித்தியாலங்களில் தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்த பிரதேசம் விருத்தி அடைய கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில் கடல் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் மேற்குறிப்பிடப்பட்ட கடற்கரைப் பகுதியில் இன்று மாலையிலிருந்து மறு அறிவித்தல் வரை தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.