துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பரிதாபமாக பலி.

0

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் ஹாறவ பொத்தானை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பதவிய வனப்பகுதிக்கு உரித்தான வடுவாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் ஹொரவப் பொத்தானை , நிகவன அப்பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply