இலங்கையின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய கனமழை.

0

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சிலவிடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு மாத்தளை , பொலன்னறுவை , காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.

Leave a Reply