மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு.

0

நபரொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த கொலைச் சம்பவம் அகலவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பஹல குடலிகம – நேபொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்துடன் நெபொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அகலவத்தை காவல்துறையினரும் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply