சப்புகஸ்கந்த பகுதியில் பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலத்தை அவரது கணவர் அடையாளம் கண்டு கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.