மண்சரிவு அபாயம் காரணத்தினால் 12 குடும்பங்கள் பாதுகாப்பு இடத்திற்கு இடம்பெயர்வு.

0

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் பசறை – கனரவல்ல மவுசாகலை தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் கனவரல்ல கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்குரிய அத்தியாவசிய உணவுப் பொதிகளை வழங்கும் நடவடிக்கைகளை பசறை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களாக பாசறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான வானிலை காரணத்தால் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply