சந்தையில் சமையல் எரிவாயு, சீனி, சீமெந்து மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 4000 மெட்ரிக்டன் லிட்ரோ நிறுவன சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அவை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சமையல் எரிவாயுவினை பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் சில பகுதிகளில் மக்கள் இன்றும் வரிசையில் காத்து நிற்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.