சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு விடுக்கப்படுள்ள அறிவிப்பு.

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 3 வது ஊசியாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சினோபார்ம் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்ட நபர்கள் ஆறு மாதங்கள் கடப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பில் நிபுணர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சினோபார்ம் தடுப்பூசியின் வீரியம் மூன்று மாதங்களுக்கு பின்னர் குறைவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆறு மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply