சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய தாம் இதன் விலையை அதிகரிக்கவுள்ளதாக குறித்த நிறுவனம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் எந்த அளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை..

தற்போது அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியலில் இருந்து சமையல் எரிவாயு நீக்க பட்டிருக்கும் நிலையில் அந்த நிறுவனத்துக்கு எரிவாயு விலை அதிகரிக்கக்கூடிய இயலுமை காணப்படுகின்றது.

இந்நிலையில் முன்னதாக 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை லாஃப்ஸ் நிறுவனம் 984 ரூபாவினால் அதிகரித்தது.

அதற்கமைய, அதன் புதிய விலை 2,840 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அவ்வாறே 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை 393 ரூபாவினால் அதிகரித்ததையடுத்து, அதன் விலை 1,136 ரூபாவாக உயர்வடைந்தது.

மேலும், லிட்ரோ கேஸ் நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 1,182 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

ஆனால் தற்போது சந்தையில் 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 2,675 ரூபாவாகக் காணப்படுகிறது.

Leave a Reply