மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 74,095 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2,196 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் , 9,840 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 1,971 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அவ்வாறு 56,923 பேருக்கு பைசர் தடுப்பூசியும், , 1,135 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி 30 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.