இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.

0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணத்தால் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதுளை, களுத்துறை, கண்டி, கேகலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply