மன்னார் மாவட்டத்தில் பல தாழ் நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

0

நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் பல தாழ் நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் பெரும்பாலான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவு மெட்ரோ மன்னார் நகர சபை தொகுதிக்கு உட்பட்ட பல சாய் நிலப்பகுதிகளும் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன..

இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply