போலி இலக்கத் தகடுகள் உற்பத்தி செய்யும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப்படை படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 15 முன் இலக்கத்தகடுகளும், போலியான 28 பின் இலக்கத்தகடுகளும் அரசு முத்திரையுடன் கூடிய 363 ஸ்டிக்கர்களும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.