இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு அண்மையிலே தாழமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் உள்ளது.

அத்துடன் மேல், சப்பிரகமுவ, தென் மற்றும் வட மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply