19 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பள்ளிகள்.

0

கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால் உலக நாடுகள் பூராகவும் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை.

தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்புக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அவ்வாறு 1 தொடக்கம் எட்டாம் வகுப்புக்களுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பாடசாலை விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இன்று முதல் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply