இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் குறித்த தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கான சகல ஏற்பாடுகளும்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் அதன் முதற்கட்டமாக சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன் வரிசை சேவையாளர்களுக்கே தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
அவர்களில் இரண்டாவது கட்டமாக பாதுகாப்பு தரப்பினருக்கும் செலுத்தப்படவுள்மை குறிப்பிடத்தக்கது.



