இலங்கையில் 48 மணிநேர மின் வெட்டு.

0

இலங்கையில் 48 மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுளள்து.

இந்நிலையில் நாடு பூராகவும் 48 மணித்தியால மின் துன்டிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கெரவலபிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையை மீள பெறுமாறு தெரிவித்து பணிப் புறக்கணிப்பில் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் 11 கட்சிகளின் தலைவர்களும் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த தொழிற்சங்க போராட்டத்தை நாளைய தினமும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றினைந்தக் கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply