இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய கன மழை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

அத்துடன் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply