திருகோணமலை மாவட்டத்தில் 200க்கும் குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 168 பாடசாலைகள் ஆரம்பம்.

0

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21)200க்கும் குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 168 பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன.

நகர்ப்புற பிரதேசங்களில் 200க்கு அதிகமான மாணவர்களை கொண்ட ஏராளமான பாடசாலைகள காணப்படுவதன் காரணமாக அங்குள்ள பாடசாலைகளுள் அனேகமானவை இன்று திறக்கப்படவில்லை .

இருப்பினும் கிராமப்புற பிரதேசங்களில் இருக்கக்கூடிய பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

கிண்ணியா அல் இக்ரா வித்தியாலயம், கிண்ணியா,இடிமன் அல் மின்ஹாஜ் வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்று பாடசாலைக்கு வருகை தந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு மாணவர்கள் நலன் கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply