தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு அரிய வாய்ப்பு.

0

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று இடம் பெற்றது.

இதில் இது வரைக்கும் தடுப்பூசி பெறாதவர்கள்,இரண்டாவது டோஸ் பெறுபவர்கள் என பலருக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீராநகர் அல்ஹிஜ்ரா மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதில் இளைஞர் யுவதிகள் ,30 வயதுக்கு மேற்பட்டோர்கள்,60 வயதுக்கு மேற்பட்டோர்கள் என பலரும் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசியினை பெற்றுக் கொண்டார்கள்.

Leave a Reply