இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தாயொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை பிரசுவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் அங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் 31 வயதான தாய் ஒருவரே இவ்வாறு ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை பிரசுவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த தாய் மூன்று ஆண் குழந்தைகளையும் மூன்று பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
இவற்றில் இரண்டாவதாகப் பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.