திருகோணமலையில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை.

0

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இளைஞர்களுக்கான இரண்டாண் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றன.

இன்றைய தினமும் (20) 21 வயது தொடக்கம் 29 வரையான இளைஞர் யுவதிகளுக்கு இத் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் ஏற்றப்படுகிறது. சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இத் தடுப்பு மருந்து ஏற்றும் பணி இடம் பெற்றது.

நேற்று(19) முதல் தடுப்பு மருந்தினை இளைஞர் யுவதிகள் ஆர்வமாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply