இங்கைகையில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின் மின்சார கட்டணங்களுக்கு சலுகைவழங்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் குறித்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , மின்சக்தி அமைச்சருடன் கலந்துரையாட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட் வைரஸ் பரவல் நிலை காரணத்தால் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த கால அவகாசம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பல மாத காலம் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே குறித்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு சுற்றுலா விடுதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்குள் நீடிப்பதற்கு கவனம் செலுத்தப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.