மகாணங்களுக்கிடையில் பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம்.

0

மகாணங்களுக்கிடையில் பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முதல் குறித்த பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தை அதன் உதவி முகாமையாளர் பண்டுவம் சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் முதல் பாடசாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்களை பாடசாலைக்கு செல்வதற்கான சிசு செரிய பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply