சில ஏற்றுமதி பயிர்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

0

சில பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலை உள்நாட்டு சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கறுவா மிளகு சாதிக்காய் கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான பயிர்களின் விலையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பொருட்களின் ஏற்றுமதி ஊடக 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு தற்போது 900 ரூபாய் அதிகரித்துள்ளது.

அவ்வாறு கருப்வா ஒரு கிலோ கிராம் 3,400 ரூபாவாகவும், கிராம்பு ஒரு கிலோ கிராம் 1,400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ கிரேம் கோப்பி 1,250 ரூபாவாக அதிகரித்துள்ளதோடு பாக்கு ஒரு கிலோ கிராம் 1000 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply