இலங்கைக்கு 10 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பிற்கு தேவையான நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த திரவ உரம் இன்று அதிகாலை 12.25 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முதலாவது தொகுதியாக ஒரு லட்சம் லீட்டர் நனோ நைட்ரஜன் திரவம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உரத்தினை சேவை மையங்களின் ஊடாக இன்று முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் 31 லட்சம் லீட்டர் நனோ நைட்ரஜன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.