உயிரிழந்த சிறுமி ஷாசாலினியின் சம்பவம் தொடர்பில் விரைவில் விசாரணை முன்னெடுக்க தீர்மானம்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி தீக்காயங்களுக்குள்ளாகி ஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று மிக விரைவாக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்த சிறுமி ஷாசாலினியின் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக வழக்கு தொடரப்படமாட்டாது என குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.
அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இதுவரையில் நிரூபிக்க முடியாமல் போன காரணத்தால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.