தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .
இதற்கமைய திருவேங்கைவாசல் பகுதியில் உள்ள அவரது குவாரி மற்றும் வீடுகளில் பத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.